search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி தூக்குபோட்டு தற்கொலை"

    மணவாளக்குறிச்சி அருகே கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மணவாளக்குறிச்சி:

    மணவாளக்குறிச்சி அம்மாண்டிவிளை உரப்பன விளை பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 43). இவரது மகள் கவுசல்யா (19). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    மாணவி கவுசல்யா கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் சென்று வந்துள்ளார். வீட்டில் பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்ல மறுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் தொடர்ந்து கல்லூரிக்கு சென்றுவந்த மாணவி யாரிடமும் பேசாமல் மன வருத்தத்துடன் காணப்பட்டு உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கவுசல்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து மணவாளக் குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் 9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம் பாளையம் அடுத்துள்ள சங்கனூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவசாமி. பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி முருகசுந்தரி.

    இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். மூத்த மகள் காவியா 11-ம் வகுப்பும், இளைய மகள் சந்தியா (வயது 14), 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    சந்தியா கண்ணப்ப நகரிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முருகசுந்தரி தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து சத்தம்போட, அருகில் இருந்தவர்கள் மற்றும் சிவசாமி ஆகியோர் வந்து பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளியில் இருந்து வந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    தவளக்குப்பம் அருகே தந்தை இறந்த சோகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா. இவர்களது மகள் புவனேஸ்வரி (வயது 15) இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். இதற்கிடையே  கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறில் சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.

    தந்தை மீது அதிகளவு பாசம் வைத்திருந்த புவனேஸ்வரிக்கு தந்தையின் மரணம் தாங்கி கொள்ள முடியவில்லை. எப்போதும் தந்தையின்  நினைவிலேயே புவனேஸ்வரி இருந்து வந்தார். சோகத்தை மறைக்க  குருசுகுப்பத்தில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கவைத்து இருந்தனர். எனினும் புவனேஸ்வரி பாட்டி சரோஜினியிடம்  தனது தந்தை இறப்பு குறித்து அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவரை சரோஜினி சமாதானம்  செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சரோஜினி கடைக்கு  சென்றிருந்த வேளையில்  புவனேஸ்வரி வீட்டின் குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். பொருட்கள் வாங்கி கொண்டு சரோஜினி வீடு திரும்பிய போது பேத்தி புவனேஸ்வரி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புவனேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  ஏற்கனவே புவனேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×